உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2023-03-05 08:25 GMT   |   Update On 2023-03-05 08:25 GMT
  • ஐஸ்வர்யாவும், பிரைண்ட்நகர் 1-வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பிரைண்ட் நகர் 13-வது நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (வயது47).

இளம்பெண் தற்கொலை

இவர்களது மூத்தமகள் ஐஸ்வர்யா (22). இவரும் பிரைண்ட்நகர் 1-வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சண்முகசுந்தரம் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் 3 சென்ட் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்யா (1½) என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் பிரைண்ட்நகர் 13-வது தெருவில் உள்ள தாய் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். நேற்று வழக்கம் போல சாந்தி உப்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் வெறுப்படைந்த ஐஸ்வர்யா வீட்டில் இருந்த துக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். வேலை முடிந்து சாந்தி வீட்டிற்கு வந்த போது, ஐஸ்வர்யா தூக்கிட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. சஞ்சிவ்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Tags:    

Similar News