உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

Published On 2022-09-12 09:23 GMT   |   Update On 2022-09-12 09:23 GMT
  • சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெரு பகுதியில் இளம்பெண் மாயம்.
  • நேற்று மாலை 6 மணிக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. சைக்கிள் ஸ்பேர்ஸ் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆயிஷா (வயது 18). பள்ளிப் படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் குடும்பத்தி னர் நேற்று மாலை 6 மணிக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். குடும்பத்தினர் கடையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது ஆயிஷா அங்கு இல்லை. திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கம், அருகிலுள்ள இடங்களில் தேடியும் எங்கும் ஆயிஷாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

Tags:    

Similar News