உள்ளூர் செய்திகள்

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-03-10 09:47 GMT   |   Update On 2023-03-10 09:47 GMT
  • சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
  • இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் எருமாபாளையம் சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் நிர்மல் தாஸ் (வயது 22). இவர் கடந்த மாதம் 2-ந் தேதி சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது ஏற்கனவே கிச்சிப் பாளையம், கொண்ட லாம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பி டத்தக்கது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று நிர்மல் தாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

Tags:    

Similar News