உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் மாயம்

Published On 2023-05-06 15:04 IST   |   Update On 2023-05-06 15:04:00 IST
  • கடந்த 28-ந்தேதி அன்று சரவணன் தனது பாட்டி வீடான கோனேரிபள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார்.
  • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் சரவணன் (வயது24). இவரது மனைவி அப்சனா. இவர்கள் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளன.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அன்று சரவணன் தனது பாட்டி வீடான கோனேரிபள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அங்கு அவர் வரவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரதுமனவைி அப்சனா சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News