உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான வாலிபர்.

வேப்பூர் அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி

Published On 2023-02-20 07:12 GMT   |   Update On 2023-02-20 07:12 GMT
  • பெரியசாமி (வயது 35). இவர் கீழக்குறிச்சி கிராமத்தில் இருந்து வேப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
  • இவர் சென்ற போது எதிரே வந்த டிராக்டர் டிப்பர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் பெரியசாமி (வயது 35). இவர் நேற்று மாலை வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் இருந்து வேப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். காட்டுமைலூர் சிவன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் டிப்பர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் உயிரிழந்த பெரியசாமியின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News