உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலைமிரட்டல்,

Published On 2023-02-09 09:59 GMT   |   Update On 2023-02-09 09:59 GMT
  • இவர் தன் ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்,
  • ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

கடலூர்:  

பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் பழைய காலணி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர்,அதே ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். அதற்கு அதே ஒரு சேர்ந்த மதிவாணன் என்பவர் எதற்கு இவனுக்கெல்லாம் பேனர் வைக்கிறாய் என கேட்டு ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

இதுகுறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து மதிவாணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News