உள்ளூர் செய்திகள்

கே.ஜி.சாவடி அருகே கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீசியபோது மயங்கி விழுந்து வாலிபர் பலி

Published On 2023-11-06 09:26 GMT   |   Update On 2023-11-06 09:26 GMT
  • காலையில் சாப்பிடாமல் சென்றதால் பரிதாம்
  • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள நவக்கரையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28).

இவர் வாரந்ேதாறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று விடுமுறை நாள் என்பதால் தினேஷ்குமார் நண்பர்க ளுடன் கிரிக்கெட் விளை யாடிக் கொண்டு இருந்தார்.

அப்போது அவர் சாப்பிடாமல் பந்து வீசினார். திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

இதனையடுத்து தினேஷ்குமாரை அவரது நண்பர்கள் மதுக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தினே ஷ்குமார் இறந்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇட த்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

Tags:    

Similar News