உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழந்த வாலிபர் பலி

Published On 2022-10-14 13:54 IST   |   Update On 2022-10-14 13:54:00 IST
  • ஆவணியப்பன் தனது நண்பர் ஆனந்தபாபுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • சிகிச்சை பலனின்றி ஆவணியப்பன் உயிரிழந்தார்.

நீடாமங்கலம்:

வலங்கைமான் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ஆவணியப்பன் (வயது 22) .

இவர் தனது நண்பர் ஆனந்தபாபுவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அப்போது பூண்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது வளைவு அருகே நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

இதில் ஆவணியப்பனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆவணியப்பன் இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News