உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்

Published On 2023-02-06 09:18 GMT   |   Update On 2023-02-06 09:18 GMT
  • 4 வயது பெண் குழந்தையையும் அழைத்து சென்றார்
  • இளம்பெண்ணுக்கு மில்லில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது

கோவை,

கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அவர் வேலை பார்க்கும் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்த பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் கள்ளக்காதலனை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரண மாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியுடன் வேறு ஒரு மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின்ன

ரும் இளம்பெண் வாலிபரு

டனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது குழந்தையுடன் வீட்டில் இருந்த இளம்பெண் தனது 4 வயது பெண் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாததது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தவிக்க விட்டு 4 வயது பெண் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News