உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் அடுத்தடுத்து விபத்து 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்

Published On 2022-07-27 09:16 GMT   |   Update On 2022-07-27 09:16 GMT
  • தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
  • எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் பள்ளிப்பாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் மொபட்டில் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.

எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.குமாரபாளையம் அருகே நேரு நகரில் வசிப்பவர் அஜித் குமார்(வயது 19.) கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தன் அண்ணனின் மொபட்டில் சேலம்-கோவை புறவழிச்சாலையில் நேரு நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியதில் அஜித்குமார் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கோவையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் கணேஷ்பாபு, (36,) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்விபத்தில் கணேஷ்பாபுவிற்கும் காயமேற்பட்டதால் இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News