உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - பக்கத்து வீட்டுக்காரர் கைது

Published On 2023-09-12 09:03 GMT   |   Update On 2023-09-12 09:03 GMT
  • பால்துரையின் கோழி ஆனந்த் என்பவரது வீட்டில் மேய்ந்தது.
  • காயம் அடைந்த பொன்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள புதூர் ஆற்றாங்கரை தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்துரை. சம்பவத்தன்று இவரது கோழி பக்கத்து வீடான ஆனந்த் (40) என்பவரது வீட்டில் மேய்ந்தது. இதையடுத்து கோழி மீது ஆனந்த் கல்லை வீசினார். இதைப்பார்த்த பால்துரையின் மகள் பொன்செல்வி (28) தட்டிக் கேட்டார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்த், பொன்செல்வியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த பொன்செல்வி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News