உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி பால்சாமி.

திண்டுக்கல் அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு உதவ கோரிக்கை

Published On 2023-07-14 12:22 IST   |   Update On 2023-07-14 12:22:00 IST
  • பிறவியிலேயே 2 கண்கள் பார்வையிழந்த எனக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
  • அரசு எனக்கு சிறிதாகப் பெட்டிக்கடை அல்லது மளிகை கடை வைப்பதற்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கூறினார்.

செம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த சிந்துபட்டி அருகே பாண்டி யன் நகரை சேர்ந்தவர் பால்சாமி (வயது49). இவருக்கு பிறவியிலே 2 கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தார். இவருக்கு பெருமாயி (45) என்ற மனைவியும், அன்னலட்சுமி (22), முத்து பெருமாயி (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். பார்வை இழந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பேனா, பென்சில் விற்பனை செய்து வந்தார்.

தற்போது சிறிய அளவிலான எடை மெஷின் வைத்துக்கொண்டு, யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். மிகவும் வறுமையில் வாடி வரும் இவரது மனைவி பெருமாயும் காக்கா வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

மூத்த மகள் அன்னலட்சுமி நர்சிங் படித்து வருகிறார். இளைய மகள் முத்து பெருமாயி டெய்லரிங் பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு தமிழக அரசு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் இவர் இலவச பஸ் பாஸ் பயன்படுத்தி வெளி ஊர்களுக்கு சென்று, எடை பார்க்கும் வருமானம் ரூ.100 முதல் ரூ.150 வரை சம்பாதித்து குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்தி வருவதாக கூறுகிறார்.

செம்பட்டியில் உள்ள, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பால்சாமி கூறுகையில், பிறவிலே 2 கண்கள் பார்வையிழந்த எனக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தமிழ்நாடு அரசு வழங்கும் மாதம் ரூ.1500 மற்றும் தினமும் நான் சம்பாதிக்கும் ரூ.100 முதல் ரூ.150 வைத்து குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு எனக்கு சிறிதாகப் பெட்டிக்கடை அல்லது மளிகை கடை வைப்பதற்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கண்ணீர் மல்க கூறினார்.

Tags:    

Similar News