உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2023-04-19 10:02 GMT   |   Update On 2023-04-19 10:02 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில், கூலி அதே இடத்தில் தலை நசுங்கி பலியானார்.
  • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதே இடத்தில் அவர் பஸ்சின் இடதுபுற பின்புற சக்கரத்தில் தலை நசுங்கி பலியானார்.

புதுச்சேரி:

காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில், கூலி அதே இடத்தில் தலை நசுங்கி பலியானார்.     காரைக்காலை அடுத்த நிரவி கீழமனை கிராமத்தைச்சேர்ந்தவர் தண்டாயுதபாணி(வயது36). இவர் கட்டிடவேலையில் சித்தாளாக வேலை செய்து வந்தார். இவருக்கு சந்தனமேரி என்ற மனைவியும், தஷ்வந்த் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். தண்டாயுதபாணி நேற்று முன்தினம் வழக்கம் போல், நிரவி அம்மாள் சத்திரம் அருகே கட்டும் கட்டிடத்தில் வேலை செய்துவிட்டு, சம்பளம் வாங்குவதற்காக, காரைக்காலுக்கு மோட்டார் சைக்கிளில் இரவு 8 மணி வந்தார்.காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், அம்பாள் சத்திரம் தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது, இவருக்கு பின்னால், அதிவேகமாக வந்த தனியார் பஸ் தண்டாயுதபாணி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதே இடத்தில் அவர் பஸ்சின் இடதுபுற பின்புற சக்கரத்தில் தலை நசுங்கி பலியானார்.

இது குறித்து, தண்டாயுதபாணியின் மனைவி சந்தனமேரி, திருபட்டினம் போக்குவரத்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில், பஸ் டிரைவர் நாகை மாவட்டம் நாகூரைச்சேர்ந்த ஷேக்தாவூது(44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News