உள்ளூர் செய்திகள்

கிணற்றில் நீச்சல் பழகிய தனியார் வங்கி ஊழியர் தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2022-09-19 07:57 GMT   |   Update On 2022-09-19 07:57 GMT
  • நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் கிணற்றில் நீச்சல் பழகிய போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.
  • அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் கோகுலபிரகாஷ் (22).

இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோகுல பிரகாஷ் பெரியபாளையம் பட்டியில் உள்ள வடக்குத் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகினார்.

அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலக வுண்டம்பட்டி போலீசார் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து கோகுலபிரகாஷின் உடலை மீட்டனர்.

பின்பு அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News