உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் மது பாட்டில் விற்றவர் கைது

Published On 2023-07-21 07:49 GMT   |   Update On 2023-07-21 07:49 GMT
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
  • முருகன் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

கடலூர்:

பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவுபடி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிறுவத்தூர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் (வயது 47) அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் முருகனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News