14 வயது மகளை மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலாளி
- மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கினார்
கோவை:
கோவை அருகே உள்ள கோவில்பாளைத்தை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 10-ந் தேதி மாணவி படிக்கும் பள்ளியில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சந்திரலேகா தலைமையில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது 8-ம் வகுப்பு மாணவி தான் உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கணபதிபுதூரை சேர்ந்த உறவினர் பாலசுப்பி ரமணியம் (வயது 50) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் பெற்றோர் இல்லாத நேரத்தில் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் மாணவியின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.