உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2023-04-02 08:19 GMT   |   Update On 2023-04-02 08:19 GMT
  • தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
  • பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த திருவாமூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் தர்மசீலன் (வயது 25), கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணிக்கு பண்ருட்டியிலிருந்து சேலம் மெயின் ரோட்டில். தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கொளப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் தர்மசீலன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ரு ட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தர்மசீலன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News