உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கணவன் தற்கொலை

Published On 2022-09-25 08:11 GMT   |   Update On 2022-09-25 08:11 GMT
  • கடலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
  • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

புதுவை மாநிலம் குருவி நத்தம் சேர்ந்தவர் நாகராஜ். (வயது 65). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது சம்பவத்தன்று நாகராஜ் குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இதற்கு மனைவி தேவகி பணம் தர மறுத்துள்ளார் இதனால் நாகராஜ்  கோபித்துக் கொண்டு அழகிய நத்தம் பகுதியில் இருந்த மோட்டார் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தூக்கணம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News