பண்ருட்டி அருகே ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த கணவன், மனைவிபோலீசார் வலை வீச்சு
- விஜயகுமார் ரூ.2 லட்சம் ஏலச் சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தார்.
- அசிங்கமாக திட்டி பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டி உள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் ஏல சீட்டு நடத்தி வந்தனர். அதேப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இதில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தனர். நெய்வேலியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரூ.2 லட்சம் ஏலச் சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தார். முதிர்வு காலம் முடிந்த பின்னரும் இவருக்கு பணத்தை திருப்பியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இவர் கடந்த 24-ந்தேதி நாராயணன் வீட்டுக்கு சென்று சீட்டு கட்டிய பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணன், தனலட்சுமி இருவரும் சேர்ந்து விஜயகுமாரை அசிங்கமாக திட்டி பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த நாராயணன், தனலட்சுமி இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.