உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே குடிபோதையில் வாலிபர்களை தாக்கிய கும்பல்

Published On 2023-05-20 09:05 GMT   |   Update On 2023-05-20 09:05 GMT
  • இதனை பார்த்த பாலமுருகன் உறவினர் கார்த்திகேயன் தடுக்க சென்ற போது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
  • ராஜேஷ், ரஞ்சித், விமல், புதுவை சேர்ந்த முரளிதரன், விஜய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சந்திக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அந்த பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த கும்பல் திடீரென்று பாலமுருகனை வழிமறித்து குடிபோதையில் சரமாரியாக தாக்கினார்கள்.

அப்போது இதனை பார்த்த பாலமுருகன் உறவினர் கார்த்திகேயன் தடுக்க சென்ற போது அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் பாலமுருகன், தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் சந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், ரஞ்சித், விமல், புதுவை சேர்ந்த முரளிதரன், விஜய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News