கைது செய்யப்பட்ட நாகராஜன்.
பழவூர் அருகே வாலிபர் கொலையில் நண்பர் கைது
- நாகராஜாவின் தாயார் பற்றி அஜித் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
- அஜித்தின் தலை மற்றும் கை இடுப்பு பகுதிகளில் நாகராஜா சரமாரியாக வெட்டினார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித் (வயது 25) கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற நாகராஜன் (25) இருவரும் நண்பர்கள்.
வாலிபர் கொலை
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது நாகராஜாவின் தாயார் பற்றி அஜித் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஜித்தின் தலை மற்றும் கை இடுப்பு பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பின்னர் அங்கிருந்து நாகராஜா தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உறவினர் வீட்டில் வைத்து இன்று நாகராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.