உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் மீனவரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
- நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பார்த்திபனின் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.
- இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது40). மீனவர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு தெருவில் நிறுத்தி இருந்தார். நேற்று இரவு பணிகளை முடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். எனி னும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இது தொடர்பான புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பா கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.