மரக்காணத்தில் மின்சாரம் தாக்கி தனியார் ஓட்டல் பெண் ஊழியர் பலி
- ஓட்டலில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
- அவர் ஓட்டலின் அருகில் இருந்த இரும்பு வேலியை தொட்டு உள்ளார்.
விழுப்புரம்:
மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். மரக்காணம் அருகே கொள்ளு மேடு விநாய கர்கோவில் தெருவை சேர்ந்த தையல் தொழிலாளர் அய்யப்பன் மனைவி மீனாட்சி (வயது 32) அந்த ஓட்டலில் உணவு பரிமாறும் வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் வழக்கம்போல் மீனாட்சி ஓட்டலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ஓட்டலின் அருகில் இருந்த இரும்பு வேலியை தொட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மீனாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது பற்றி தகவல் தெரிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாட்சி உடலை கைப்பற்றி இந்த சம்பவம் எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்து போன மீனாட்சிக்கு10 வயது மற்றும் 7 வயதுடைய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் .தனியார் ஓட்டலில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்து போன மீனாட்சி உடலை வாங்க மருத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.