உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே குடிப்பதற்கு பணம் தராததால் விவசாயி தற்கொலை

Published On 2022-07-08 06:22 GMT   |   Update On 2022-07-08 06:22 GMT
  • விழுப்புரம் அருகே குடிப்பதற்கு பணம் தராததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
  • ஒருவரிடம் ரூ. 200 வாங்கி க்கொண்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே ராமையாம் பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் அதே பகுதியில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் சரிவர வேலைக்கு செல்வதில்லை. கடந்த மூன்றாம் தேதி வீட்டில் 2 மகள்கள் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்துவிட்டனர். இதனால் அதே பகுதி சேர்ந்த நபர் ஒருவரிடம் ரூ. 200 வாங்கி க்கொண்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த விசயம் மனைவி மற்றும் மகளுக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்து அவரை முண்டியமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திகேயன் இறந்தார். இது குறித்து வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News