உள்ளூர் செய்திகள்
- அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
- 1.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மேற்கு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டி ருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் வடக்கு வாசலை சேர்ந்த சூர்யா (வயது 23 ) என்பதும் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. மேலும் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் ரவுடி என்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சூர்யாவிடம் இருந்து 1.6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.