உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் பேஸ்புக் மூலம் பழகி வாலிபரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்

Published On 2023-07-29 14:57 IST   |   Update On 2023-07-29 14:57:00 IST
  • உஷாராணி தனது கணவரை பிரிந்து மாதேசை தேடி மேட்டுப்பாளையம் வந்தார்.
  • மாதேஸ் மேட்டுப்பாளையம் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறையை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 29). கூலித் தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே சந்திரலேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பிரிந்து விட்டனர்.

இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு மாதேசுக்கு பேஸ்புக் மூலமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை உள்ள உஷாராணி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் இளம் பெண்ணின் கணவருக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து உஷாராணி தனது கணவரை பிரிந்து மாதேசை தேடி மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த உஷாராணி தனது கணவரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உஷா ராணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மாதேஸ் மேட்டுப்பாளையம் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உஷாராணியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News