உள்ளூர் செய்திகள்

வடவள்ளியில் டி.எஸ்.பி.தலைமையில் ஆலோசனை கூட்டம்

Published On 2022-08-22 10:09 GMT   |   Update On 2022-08-22 10:09 GMT
  • விநாயகர் சிலை வைப்பவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
  • சிலை வைப்பது தொடர்பான நெறிமுறைகள் பற்றி போலீசார் தரப்பில் தெளிவாக எடுத்துரைத்தனர்.

வடவள்ளி 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை பேரூர் சரக டி.எஸ்.பி.ராஜபாண்டியன் தலைமையில் விநாயகர் சிலை வைப்பவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.


இதில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஒருவர் மற்றும் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி , விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிலை வைப்பது தொடர்பான நெறிமுறைகள் பற்றி போலீசார் தரப்பில் தெளிவாக எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News