உள்ளூர் செய்திகள்

கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் வீசப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published On 2023-11-18 08:17 GMT   |   Update On 2023-11-18 08:51 GMT
  • பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையை வீசி சென்றது யார்
  • ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டு அருகே பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையை யாரோ வீசி விட்டு சென்றனர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து 45 நாட்களேயான குழந்தை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தகாத உறவின் காரணமாக பிறந்ததால் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். ஆனால் யாரென கண்டு பிடிக்க முடியவில்லை.

குழந்தையை டாக்டர்கள் குழந்தைகள் வார்டில் அனுமதித்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் குழந்தை திடீரென பரிதாபமாக இறந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News