உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே முன்விரோத தகராறில் 2 தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

Published On 2023-08-20 08:50 GMT   |   Update On 2023-08-20 08:50 GMT
  • விஜயன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
  • மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள்.

கடலூர்:

கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவ ருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத் தன்று மாதேஷ் வீட்டிற்கு விஜயன் உட்பட 5 பேர் நேரில் சென்று சரமாரியாக தாக்கினார்கள். அப்போது அதனை தடுக்க வந்த அவரது தாய் சந்திராவை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள். இதில் காயமடைந்த மாதேஷ், செந்தில்வேல் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற னர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் செந்தில்வேல், நடராஜன், கலை, சரவணன், விஜயன் ஆகிய 5 பேரும், செந்தில் வேல் கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ், குமரன், சந்திரா என மொத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News