உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே ஆந்திரா வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

Published On 2023-04-17 10:45 GMT   |   Update On 2023-04-17 10:45 GMT
  • கடலூர் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
  • இங்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷேர் அலி என்பவர் வேலை செய்து வந்தார்.

கடலூர்:

கடலூர் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இங்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷேர் அலி என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று 2 நபர்கள் திடீரென்று ஷேர் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஷேர் அலி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தோட்டப்பட்டு சேர்ந்த வெங்கடாஜலபதி உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News