உள்ளூர் செய்திகள்
- சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.
- சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார்.
சேலம்:
சேலம் டவுன் தேவேந்திரபுரம் பகுதியில் வசித்து வருபவர் போகாராம். இவருடைய மகன் பரத்குமார் (வயது 17). இவர்களுடைய சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் தேபாவாஸ் கிராமம் ஆகும்.
போகாராம் சேலத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பரத்குமார் திடீரென மாயமாகி உள்ளார். மகனை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பரத்குமாரை ேதடி வருகின்றனர்.