உள்ளூர் செய்திகள்

கடலில் மூழ்கி இறந்த சிறுவனை படத்தில் காணலாம். 

சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி

Published On 2022-07-30 13:38 IST   |   Update On 2022-07-30 13:38:00 IST
  • சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியானார்.
  • இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் போலீஸ் சரகம் அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. மீனவர். அவரது மகன் விவன் (வயது 5).இவர் இன்று காலை திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவன் விவனை தேடினர். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இன்று காலை 9.30 மணி அளவில் பேட்ேடாடை பகுதியில் உள்ள கடற்கரையில் சிறுவன் விவன் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இதுகுறித்து வேலு புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த சிறுவன் கடற்கரையில் விளையாடிய போது ராட்சத அலையில் சிக்கி இறந்து இருப்பது தெரியவந்தது.

Tags:    

Similar News