உள்ளூர் செய்திகள்

கடலூரில் 4 மாத கர்ப்பிணி மூச்சு திணறி திடீர் சாவு

Published On 2023-08-17 09:13 GMT   |   Update On 2023-08-17 09:13 GMT
  • கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
  • கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

கடலூர்:

கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி கல்பனா (வயது 33). கல்பனா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கல்பனாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கல்பனாவுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்பனாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே பரிதாபமாக கல்பனா உயிரிழந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News