ரூ.50 ஆயிரம் கடத்தல் மது பாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது
- வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மருந்து கொத்தலரோட்டை சேர்ந்த விஜயகாந்த், மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த பெருமாயி என்பது தெரியவந்தது.
இதன் பின்னர் தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.