உள்ளூர் செய்திகள்
நாசரேத்தில் தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை
- பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
- போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
நாசரேத்:
நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது மனைவி சின்னம்மாள் (வயது 65). கணவன்-மனைவி நேற்று வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்க்க சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இது தொடர்பாக சின்னம்மாள் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.