உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது

Published On 2022-10-22 08:49 GMT   |   Update On 2022-10-22 08:49 GMT
  • ஸ்ரீதர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் மாயமானது
  • 4 பேரையும் போலீசார் கைது செய்து திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது29). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது காணாமல்போனது.அதே போன்று அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீதர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் மாயமானது.

இது குறித்து அவர்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த ரெட்டை வினோத் என்ற வினோத் (25), 3 சென்ட் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த மகாராஜா (20), அண்ணாநகரை சேர்ந்த பொன்ராஜ் என்ற ராசு (23) கருணாநிதி நகரைச் சேர்ந்த கார்த்திக் (22) ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

4 பேர் கைது

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்ப ட்டர்களில் ரெட்டை வினோத் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 10 வழக்குகளும், பொன்ராஜ் மீது கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News