உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
- சந்தப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
- இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும், ரூ. 80 பணத்தை பறிமுதல் செய்தனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சந்தப்பட்டி, செட்ரப்பட்டி, மூக்கனூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற தடுப்பு நடவடக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் சந்தப்பட்டி சேர்ந்த பழனி மகன் சரவணன் (30), சுப்பிரமணி மகன் பழனி (47), பொன்னுசாமி மகன் ராமு (50) மற்றும் பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் வெங்கடேசன் (42) என தெரிய வந்தது.
இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும், ரூ. 80 பணத்தை பறிமுதல் செய்தனர்.