ஒண்டிப்புதூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற 300 பேர் கைது
- 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கேட் முன்பு திரண்டனர்
- ரெயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கோவை,
ஒண்டிப்புதூர் ராமச்சந்திர நாயுடு வீதியில் ெரயில்வே கேட் உள்ளது. இங்கு 2011-ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஜூன் மாதம் இங்கு மேம்பாலம் கட்டப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ரயில்வே கேட் மூடப்படும் என ெரயில்வே நிர்வாகம் அறிவித்ததுடன் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சென்றுவர மாற்று பாதையும் அமைத்து கொடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அந்தப் பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்க கோரி ரெயிலில் மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். சக்தி நகர், சிவலிங்கபுரம், காமாட்சி நகர், சூர்யா நகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை ெரயில்வே கேட் முன்பு திரண்டனர்.
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தண்டவாளத்திற்கு செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி 300-க்கும் மேற்பட்டோர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், '' நாங்கள் எங்கள் பகுதியில் இருந்து திருச்சி சாலை வரவேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் ஆகும்.
ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்று பாதை வழியாக வரும்போது 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்றனர்.