உள்ளூர் செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது 26 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2023-04-12 14:55 IST   |   Update On 2023-04-12 14:55:00 IST
  • குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது மது விற்றதாக தேவூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(வயது 27), முருகன்(58), எம்.ஜி.ஆர்.நகர் அருகே ஏகாம்பரம்(55) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News