உள்ளூர் செய்திகள்

வீட்டு வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

Published On 2023-08-05 09:10 GMT   |   Update On 2023-08-05 09:10 GMT
  • வீட்டு வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கீரப்பாளையத்தை சேர்ந்த ராம்சிங் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர்.

கடலூர்:

சிதம்பரம் அடுத்த அம்மாப்பேட்டை சாரதா ராம் நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வனஜா தலைமை யிலான போலீசார் விரைந்து சென்றனர் அங்கு ஒரு பெண் விப சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த உமாமகேஸ்வரி (வயது 42) என்பது தெரியவந்தது.

இவருக்கு வீட்டில் சமையல் வேலை வாங்கித் தருவதாக கூறி, அம்மாப் பேட்டையை சேர்ந்த திவ்யா (35), பெருமாத்தூரை சேர்ந்த சவுகத்அலி (54), கீரப்பாளையத்தை சேர்ந்த ராம்சிங் (32) ஆகியோர் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர். இங்கு அவரை மிரட்டி விப சாரத்தில் ஈடுபடுத்தியதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உமாமகேஸ் வரியை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News