உள்ளூர் செய்திகள்

விபசாரம் நடத்திய இளம்பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2023-02-14 14:54 IST   |   Update On 2023-02-14 14:54:00 IST
  • விபசாரம் நடைபெ றுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
  • இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் உள்ளன.

இங்கு வாடிக்கையா ளர்களை கவரும் வகையில் பேசி மசாஜ் சென்டருக்கு அழைத்து, இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்ய வைப்பதும், பின்னர் அவர்களிடம் நைசாக பேசி விபசாரம் நடைபெ றுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் போலீசார் சீதாராம்மேட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் திடீரென சோதனை நடத்தினர்.

அங்கு மசாஜ் சென்டர் என அழைத்து இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டியை சேர்ந்த துளசிராமன் (வயது 30), பெங்களூரு மங்கம்மனபாளையாவை சேர்ந்த ஸ்ரீநாத் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்குள்ள ஒரு மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிந்தது.

இதுதொடர்பாக ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த அர்ச்சனா (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

இளம்பெண்களை வைத்து விபசாரம் ஓசூரில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், ரிலாக்ஸ் மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை வரவழைக்கிறார்கள்.

பின்னர் அவர்களிடம் இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்ய வைத்து அவர்களுடன் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

இது போன்ற மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைப்பதுடன், சம்பந்தப்ப ட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News