உள்ளூர் செய்திகள்

ஆடுகள் திருடி கைதானவர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்.

சொகுசு காரில் வந்து ஆடுகள் கடத்திய 3 பேர் கைது

Published On 2023-10-24 09:42 GMT   |   Update On 2023-10-24 09:42 GMT
  • மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
  • சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

மன்னார்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த அரபாத் (வயது 28), ஆறுமுகம் (50), செல்வராஜ் (55) ஆகிய 3 பேரும் சொகுசு காரில் மன்னார்குடிக்கு வந்துள்ளனர்.

பின்னர், அந்த காரில் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கீழப்பாலம் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த 4 ஆடுகளை பிடித்து தங்கள் காருக்குள் வைத்து கடத்திவிட்டு வேகமாய் சென்றனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் சொகுசு காரை கண்டறிந்து அதில் இருந்த 4 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஆடு திருடுவதை வழக்கமாக வைத்துள்ளது தெரியவந்தது.

பட்டப்பகலில் ஆடுகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News