உள்ளூர் செய்திகள்

டீசல் திருடிய 3 பேர் கைது

Published On 2023-02-11 15:38 IST   |   Update On 2023-02-11 15:38:00 IST
  • மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  • இது தொடர்பாக டவுன் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

திருப்பத்தூர் மாவட்டம், சின்ன கம்மியாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது27). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

கிருஷ்ணகிரி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் சரவணன், ராஜா, அருள் ஆகிய மூன்று பேரும் டீசல் திருடி கொண்டிருந்தனர்.

அப்ேபாது கார்த்திக் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக டவுன் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News