உள்ளூர் செய்திகள்

சிறுமுகை அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்;2 பேர் பலி

Published On 2023-06-05 10:02 GMT   |   Update On 2023-06-05 10:02 GMT
  • சேகர் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்குப்பம்பாளையம் சாலையில் சென்றார்.
  • விபத்தில், சேகர் மற்றும் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை அன்னூர் அருகே காரனூரை சேர்ந்தவர் சேகர்(32).

இவர் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கு ப்பம்பாளையம் சாலை யில் சென்றார்.

அப்போது எதிரே சிறுமுகை லிங்காபுரத்தை சேர்ந்த நவீன்குமார்(30) மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன்(30) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கி ளில் வெள்ளிக்குப்பம் பாளையம் நோக்கி வந்தனர். அதே சாலையில் கருப்பசாமி(36) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது வெள்ளிகுப்ப ம்பாளையம் சாலை பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக 3 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொ ண்டன. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர்.

இந்த விபத்தில், சேகர் மற்றும் நவீன்குமார் ஆகி யோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.நவீன்குமா ருடன் வந்த ஹரிஹரனுக்கு பலத்த காயமும், கருப்ப சாமி லேசான காயமும் ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சிறுமுைக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஹரியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.மேலும் லேசான காயமடைந்த கருப்பசாமி சிறுமுகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிறு முகை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News