உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்
புதுக்கோட்டை:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த அதீத கனமழையால் டெல்டா மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.