உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட 3 பேர்.

வங்கிகளில் பணம் எடுப்பவர்களிடமிருந்து கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2022-09-05 09:48 GMT   |   Update On 2022-09-05 09:48 GMT
  • புதுப்பள்ளியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் பேசியுள்ளனர்.
  • கருகாபட்டினம், வடமலை ஆகிய இடங்களில் பலரிடம் பல லட்ச ரூபாய் திருடியது தெரியவந்தது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம்பகுதியில் 5 மாதங்களாக வேட்டைக்கா ரனிருப்பு, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், தலை ஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பவரை குறிவைத்து பல லட்ச ரூபாய் கொள்ளை நடைபெற்றது.

இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் டி.எஸ்பி. முருகவேல், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பசுபதி, தனிப்படை எஸ்ஐ. வெங்கடாஜலம், துரைராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வேட்டை க்காரனிருப்பு அருகில் உள்ள புதுப்பள்ளியில் சந்தேகப்படும்படி நின்று கொ ண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில்முன்னுக்கு பின் பேசி உள்ளனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரித்ததில் வேதாரண்யம் பகுதிவங்கிகளில் பணம் எடுத்து வந்தவர்களிடம் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.மேலும் வேட்டைக்கா ரனிருப்பு, கள்ளிமேடு, கருகாபட்டினம், வடமலை ஆகிய இடங்களில் பலரிடம் பல லட்ச ரூபாய் திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த குண்டு கார்த்திக் (வயது 33), அவரது மனைவி காயத்திரி(32), கார்த்திக் மாமனார்கணேசன்(60) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து்நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கபட்டனர்.

காயத்திரி திருவாரூரில் மகளிர் சிறையில் அடைக்க ப்பட்டார்.

Tags:    

Similar News