உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 29 பவுன் நகைகள்-பணம் கொள்ளை

Published On 2023-07-27 14:38 IST   |   Update On 2023-07-27 14:38:00 IST
  • குருஞானாம்பிகை தனது நகைகளை பீரோவில் வைத்திருந்தார்.
  • சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

கோவை,

கோவை சாய்பாபா காலனி 8-வது வீதியை சேர்ந்தவர் குருஞானாம்பிகை(47). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நகைகளை பீரோவில் வைத்திருந்தார். சம்பவத்தன்று இவர் தனது நகைகளை பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. இது குறித்து குருஞானாம்பிகை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News