ஆறுமுகநேரி மெயின் பஜாரில் பேக்கரி கடை பூட்டை உடைத்து ரூ.28 ஆயிரம் திருட்டு
- சாகுல் ஹமீது வழக்கம்போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார்.
- பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மெயின் பஜார் காமராஜர் பூங்கா எதிரே காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (49) என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை உள்ளது.
பூட்டு உடைப்பு
அவர் நேற்று காலையில் வழக்கம்போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதனுள் வைத்திருந்த ரூ.28 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசில் புகார்
இது பற்றி சாகுல் ஹமீது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பேக்கரி கடையின் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிய காட்சி பதிவாகி இருந்தது. அந்த 2 நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.