உள்ளூர் செய்திகள்

தெலுங்குபாளையத்தில் பெண் வீட்டில் 26 பவுன் நகை மாயம்

Published On 2023-10-20 08:54 GMT   |   Update On 2023-10-20 08:54 GMT
  • 7-ந் தேதி லாக்கர் சாவி காணாமல் போயிருந்தது.
  • செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை,

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா அம்பிகை (22). இவர் செல்வபுரம் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5.10.23 அன்று வீட்டில் உள்ள என்னுடைய நகைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு பீரோவில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி சாவியை பீரோவில் வேறு ஒரு இடத்தில் வைத்திருந்தேன்.

அடுத்த நாள் நான் ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும் என்பதால் பீரோவை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டேன். 7-ந் தேதி பீரோவை திறந்து லாக்கர் சாவியை எடுக்க பார்த்தபோது லாக்கர் சாவி காணாமல் போயிருந்தது.

இது குறித்து கணவரிடம் சொன்னேன், கணவரும் லாக்கரை உடைத்து பார்த்தபோது, பீரோ லாக்கரில் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டியில் இருந்த மதிப்புள்ள 26¾ பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் வீடு முழுவதும் தேடினோம். எங்குமே கிடைக்காததால் செல்வபுரம் போலீசில் புகார் செய்தேன் என்று கூறினார். புகாரை பதிவு செய்த செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News