உள்ளூர் செய்திகள்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருடன்

திருட வந்த போது சில்மிஷம்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருடன்

Published On 2022-06-04 10:02 GMT   |   Update On 2022-06-04 10:02 GMT
கொளத்தூர் அருகே திருட வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
கொளத்தூர்:

சென்னை கொளத்தூரை அடுத்த வெற்றி நகர் சிவலிங்கம் தெருவை சேர்ந்தவர் மகேஷ்பாபு. பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (30). வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த மகேஷ் பாபு தனது உறவினரான அந்தோணிராஜ் என்பவருடன் வீட்டு வாசலில் படுத்து தூங்கினார். கதவு திறந்த நிலையில் சசிகலாவை தனது பிள்ளைகளுடன் வீட்டுக்குள் தூங்கினார். நேற்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சசிகலாவிடம் யாரோ மர்ம ஆசாமி சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. உடனே சசிகலா கண்விழித்து பார்த்ததில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. சசிகலா சத்தம் போட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும் வீட்டில் இருந்த 2 செல்போன் திருட்டு போனதும் தெரியவந்தது.

விசாரணையில் திருடவந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் திரு.வி.க. நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News